20.8.18

பாலகிரக தோஷம்

 ஏட்டுக் குணம்

    முன்பொரு காலத்தில் இப்படி ஒரு சிகிச்சை முறை இருந்தது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
  குழந்தைகளுக்கு பாலகிரக தோஷம் ஏற்பட்டால், அதற்கு ஏடு எழுதிக் கட்டினால் உடனே குணமாகுமாம்!?!?!? குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கண் சொருகி விடுதல், உதடு வறண்டு காணப்படுதல், மேற்பார்வை பார்ப்பது, சுணக்கம், சிணுங்கிக் கொண்டே இருத்தல் போன்றவை இதற்கு அறிகுறிகளாகும். இதனால் ஒருசில குழந்தைகள் வாந்தியெடுக்கும். இவை ஏற்பட்டால் பால கிரகத் தோஷம் என அறிந்து ஏடு எழுதிக் கட்ட வேண்டுமாம்! ஏடு எழுதும்போதே குழந்தைக்கு நோய் குணமாவதை உணரலாமாம்!!!
பாலகிரக தோஷத்தினை சில இடங்களில் ஏட்டுக் குணம் என்று சொல்வார்கள். இந்நோய் பதினாறு வயதுவரை ஏற்படும் ஏடு எழுதுவதில் சிறிய ஏடு என்றும், பெரிய ஏடு என்றும் இருவகையுண்டு சிறிய ஏடு எழுதுதலானது, பனை ஓலை ஒன்றில் எழுதிச்சுருட்டிக் கட்டப்படுவதாகும். பெரிய ஏடானது தனித்தனி மடல்களாக பதினாறு மடல்களில் எழுதப்படுவதாகும்.

4.8.18

பயோ கெமிஸ்ட்ரி - BIO CHEMISTRY

பயோ கெமிஸ்ட்ரி - BIO CHEMISTRY

தாது உப்புகள்:-


     பயோ கெமிஸ்ட்ரி (BIO CHEMISTRY) மருத்துவத்தை கண்டுபிடித்தவர் வில்ஹெம் ஹென்றி சூஸ்லர் என்ற மாமேதை ஆவார். 1872ம் ஆண்டு இம்மருத்துவத்தை உலகிற்கு அளித்தார். இவர் ஹோமியோபதி மருத்துவர். டாக்டர் ஹானிமன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் மனிதனின் எரித்த உடலின் சாம்பலை எடுத்து ஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற பன்னிரெண்டு தாது உப்புக்கள் இருப்பதை கண்டுபிடித்தார். மனிதனின் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொரு தாதுக்கள் நிறைந்திருப்பதைக் கண்டார். இதில் ஒன்று இரண்டு தாதுக்கள் குறைவதால் அல்லது மிகுவதால் மனிதனுக்கு நோய் உண்டாய்கிறது என்பதை உணர்ந்து குறைவுள்ள அந்த தாது உப்புக்களை கொடுத்து அதை சரிக்கட்டினால் நோய்கள் நீங்கிவிடும் என்பதை தன் ஆராய்சியின் மூலம் நிருபித்தார்.
   இந்த தாதுக்களில் ஒன்றை எடுத்து அதில் ஒன்பது மடங்கு பால் சர்க்கரை சேர்த்து அதை கல்வத்தில் இட்டு இரண்டு முதல் மூன்று மணிநேரம் அரைக்க வேண்டும். அரைத்து எடுத்த மருந்து 1X வீரியம் ஆகும். அதேபோல் 1X வீரியம் உள்ள மருந்து ஒரு பங்கும் பால் சர்க்கரை ஒன்பது பங்கும் சேர்த்து அரைத்து எடுத்த மருந்து 2X வீரியம் ஆகும். இதேபோல் 2X, 3X, 6X, 12X, 30X, 200X வரையில் மருந்துகள் தயாரிக்கப் படுகின்றது. இது பவ்டர் வடிவிலும் மாத்திரை வடிவிலும் ஹோமியோ மருந்து கடைகளில் கிடைக்கிறது. நமக்கு தேவையான மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இதை மருந்து என்று சொல்வதைவிட சத்து டானிக் என்றும் தாது உப்புக்கள் என்றும் சொல்லலாம்.
    இதில் பக்கவிலைவுகளோ உடலுக்கு தீங்கோ ஏற்படுவது இல்லை. மற்ற மருந்துகளுடன் இணைந்து சாப்பிடலாம். இதனை புண்கள், சிராய்ப்பு, தோல்நோய்கள், கட்டிகள், வீக்கம் முதலியவற்றிற்கு எண்ணெயில் குழைத்து மேல் பூச்சாகவும் பூசலாம் பெரம்பாஸ் மாத்திரையை புண்கள் மீது பூசினால் ரத்தம் வருவது உடனே நிற்கும். புண்கள் விரைவில் ஆறும்.